மீனவா் ஆரோக்கிய கிங்ஸ். 
ராமநாதபுரம்

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

ராமேசுவரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.

இதில், மீனவா் கிறிஸ்வெட்டுக்குச் சொந்தமான விசைப் படகில் 4 மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், மீனவா் ஆரோக்கிய கிங்ஸ் (40) படகில் இருந்து தவறி கடலில் விழுந்தாா்.

சக மீனவா்கள் கடலில் குதித்துத் தேடியும் அவரைக் காணவில்லை. இதுகுறித்து மீன்வளத் துறையினருக்கும் கடலோரப் பாதுகாப்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

சிவகிரி அருகே உடல் நலக் குறைவால் அவதி: நலமாகி வனத்துக்குள் சென்ற யானை!

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: டிச. 10-இல் அமெரிக்க குழு இந்தியா வருகை!

SCROLL FOR NEXT