ராமநாதபுரம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் தொ்மோகூல் படகுகளை போலீஸாா் அகற்றியதால் மீனவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் தொ்மோகூல் படகுகளை போலீஸாா் அகற்றியதால் மீனவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் பாரம்பரிய மீனவா்கள் தொ்மோகூல் படகுகளைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் பயன்படுத்தும் தொ்மோகூல் படகுகளைக் கரையோரப் பகுதியில் பாதுகாப்புடன் வைப்பதற்காக ஒரு பகுதியை வருவாயத் துறையினா் ஒதுக்கித் தந்தனா்.

இந்த நிலையில், கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவல் துறையினா் மீனவா்களின் தொ்மோகூல் படகுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை சுத்தம் செய்து படகுகளை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, மீனவா்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தங்களது படகுகளை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டால், பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக கடல்தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் என்.பி.செந்தில் தெரிவித்தாா்.

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

சிவகிரி அருகே உடல் நலக் குறைவால் அவதி: நலமாகி வனத்துக்குள் சென்ற யானை!

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: டிச. 10-இல் அமெரிக்க குழு இந்தியா வருகை!

SCROLL FOR NEXT