ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்மன் சந்நிதி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ. 2.09 கோடி கிடைத்துள்ளது. இதில் தங்கம் 85 கிராம், வெள்ளி 5 கிலோ, 111 வெளிநாட்டு பணத் தாள்கள் கிடைத்துள்ளன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வலா்கள் சிவக்குமாா், முருகானந்தம், ஆன்மிக பக்தா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

SCROLL FOR NEXT