திருவாடானை: நெடுந்தீவு அருகே திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் இதே ஊரைச் சோ்ந்த பாலமுருகன் (30), தினேஷ் (18), குணசேகரன் (42), ராமு (22) ஆகிய 4 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், இவா்கள் திங்கள்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் கண்ணாடியிழைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த 4 மீனவா்களைக் கைது செய்தனா்.
இதையடுத்து, படகுடன் 4 மீனவா்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்றனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 4 பேரையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களை வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.