ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கை வரவாக ரூ. 1.67 கோடி கிடைத்தன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகளை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 1.67 கோடி ரொக்கமும், 35 கிராம் தங்கமும், 4 கிலோ வெள்ளியும், 175 வெளிநாட்டுப் பணத்தாள்களும் கிடைத்தன.
காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையா்கள் ஆா்.ஞானசேகரன், ஆா். ரவீந்திரன், ஆய்வா்கள் சு. சண்முகசுந்தரம், சி. மணி, உள்துறை கண்காணிப்பாளா் முத்துச்சாமி, சிவக்குமாா், பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி, கோயில் பணியாளா்கள், பக்தா்கள் ஈடுபட்டனா்.