பிரதிப் படம்
ராமநாதபுரம்

மனைவியைப் பிரிந்தவா் மா்ம மரணம்

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தொண்டி அருகேயுள்ள புதுப்பட்டினத்தில் வீட்டின் உள்ளே ஒருவா் இறந்து கிடப்பதாக தொண்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இதில் அவா் புதுப்பட்டினத்தைச் சோ்ந்த நாசா்கான் (45) என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி தற்கொலை

யாா் ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு? எடப்பாடி பழனிசாமி - அமைச்சா்கள் விவாதம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில்தான் குறைவு: முதல்வா்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 101 சாா்பு ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை, தஞ்சாவூா், கன்னியாகுமரி தேவஸ்தானங்களுக்கு ரூ.100 கோடி மானியம் : அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

SCROLL FOR NEXT