ராமேசுவரத்தில் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ உள்பட 230 பேர் மீது வழக்கு
ராமேசுவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்பட 230 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமேசுவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்பட 230 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி ரயில்வே சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு சங்கத்திற்காக ஆதரவு திரட்டினர். இதற்கு மற்றொரு சங்கத்தினர் வெளியாட்கள் உள்ளே வரக் கூடாது என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் இரு சங்கத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை ராமேசுவரம் தேவர் சிலை அருகே மதுரை தெற்குதொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 230 பேர் மீது ராமேசுவரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.