சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரணியூர் ஸ்ரீஆட்கொண்ட நாதர் சிவபுரந்தேவி சிற்ப கோயிலில் குபேர பகவானுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இரணியூர் ஸ்ரீ ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி திருக்கோயில், மிகவும் பிரசித்தி பெற்றதும், சிற்பக் கோயில் என்ற பெயர் கொண்டதுமாகும். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள குபேர பகவானுக்கு ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன் பொருட்டு குபேரருக்கு புதன்கிழமை முதல்கால யாகபூஜை நடந்தது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து குபேரருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பூஜை ஏற்பாடுகளை இரணிக்கோயில் நகரத்தார் மற்றும் ஆட்கொண்ட நாதர் சிவபுரந்தேவி கோவில் நிர்வாக காரியத் தலைவர் பழனியப்பசெட்டியார், அறங்காவலர் குழுத் தலைவர் முத்துகருப்பசெட்டியார், மேலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர். சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இரவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் குபேரர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.