சிவகங்கை

காளையார்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

DIN

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீரமுத்துப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
 கிராமத்தில் உள்ள லிங்கத்து அய்யனார்  கோயில் திருவிழாவை முன்னிட்டு இப்பந்தயம் நடத்தப்பட்டது. முன்னதாக கோயிலில் லிங்கத்து அய்யனார் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, வீரமுத்துப்பட்டி-கொல்லங்குடி சாலையில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 13 வண்டிகளும், சின்ன மாடு நிலையில் 16 வண்டிகளும் பங்கேற்றன. 
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை வீரமுத்துப்பட்டி, காளையார்கோவில், கொல்லங்குடி, அரியாகுறிச்சி, கீரனூர் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT