சிவகங்கை

திருப்புவனம் அருகே கோஷ்டி மோதல்: பெண் உள்பட 5 பேர் காயம்; 5 பேர் மீது வழக்கு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது போலீஸார் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
 கொத்தங்குளம் காலனியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது வீட்டின் அருகே உள்ள தோப்பில் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனராம். இதை மலைச்சாமி மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மலைச்சாமி, பாப்பம்மாள், பிரவீன்குமார், முனீஸ்வரன், பிரதாப்குமார் ஆகியோரை தாக்கினர். 
  இதில் பாப்பம்மாள் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
     இச்சம்பவம் தொடர்பாக மலைச்சாமி திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார், பாலாஜி, அகிலேஷ்வரன், வல்லரசு, சௌந்திரபாண்டி ஆகிய 5 பேர் மீது தீண்டாமை ஒழிப்புப் பிரிவு, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் இவர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. மனோகரன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பால்பாண்டி, சுந்தரமாணிக்கம் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT