சிவகங்கை

சிவகங்கை அருகே ரயில் மறியல் போராட்டம்

DIN

சிவகங்கை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை அகற்றக் கோரி, மேலவெள்ளந்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில் மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பு அருகே உள்ள மேலவெள்ளந்தி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், சிவகங்கை-மானாமதுரை ரயில் இருப்புப் பாதையில் ஆளில்லா ரயில் கடவுப் பாதை இருந்துவந்தது. இந்நிலையில், அப்பகுதி மக்களின் தொடா் கோரிக்கை காரணமாக, ரயில் கடவுப் பாதை சுரங்கப் பாதையாக மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், மழைக் காலங்களில் சுரங்கப் பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற போதுமான வசதிகள் ஏற்படுத்தவில்லையாம். இதன் காரணமாக, மழை நீா் தேங்கி போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் கூறுகின்றனா்.

இந்நிலையில், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை, சிவகங்கை வழியாக சென்னை செல்லும் ரயிலை மேலவெள்ளந்தி கிராமம் அருகே சிவப்புக் கொடி காட்டி நிறுத்தினா். தொடந்து, தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் சீராளன், ரயில்வே போலீஸாா் உள்ளிட்டோா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். அதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

பின்னா், சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக 6.05 மணிக்கு சென்னை ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT