இளையான்குடி மேற்கு ஒன்றியம் மற்றும் நகர் பகுதியில் திமுக சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது.
இளையான்குடி நகரில் கீழாயூர் காலனி, கண்மாய்கரை, ஆரிப்நகர், பஜார், சாலையூர், பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் ஒன்றிய பகுதிகளில் பல கிராமங்களிலும் திமுகவினர் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். அதன்பின் திமுக கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. திமுக நகர்ச் செயலாளர் நஜூமுதீன் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் சுப.மதியரசன் முன்னிலை வகித்தார். விழாவில் திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி அய்யாச்சாமி, துணைச் செயலர் மலைமேகு உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.