சிவகங்கை

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சாவு

DIN

இளையான்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா மகன் அமினுல்லாகா (34). இவர், தனது இருசக்கர வாகனத்தில் இளையான்குடியிலிருந்து சிவகங்கைக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
 புதுக்குளம் அய்யனார்கோயில் அருகே சென்றபோது, சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு வந்த காவலர் கண்ணனின் இருசக்கர வாகனமும், அமினுல்லாகா இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அதையடுத்து இருவரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமினுல்லாகா உயிரிழந்தார். காவலர் கண்ணனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT