சிவகங்கை

கண்மாயில் மணல் கடத்திய 24 லாரிகள், 4 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்

DIN


திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கண்மாயில்  அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 லாரிகள், 4 பொக்லைன் இயந்திரங்களை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அரசூரில் பெரிய கீரமங்கலம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு அருகே குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த நிலத்தில்  சவுடு மண் எடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் தடையில்லாச் சான்று வழங்கி உள்ளார். இந்த சான்றின் மூலம் அந்த நிலத்தின் அருகே உள்ள பெரிய கீரமங்கலம் கண்மாயில் சுமார் 25 அடிக்கு ஆழமாக தோண்டி மணலை கடத்தி  வந்துள்ளனர்.
இதுகுறித்து திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷிடம் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சனிக்கிழமை மாலை  சம்பவ இடத்துக்கு போலீஸாருடன் சென்று டிஎஸ்பி பார்வையிட்டார். அப்போது கண்மாயில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. 
இதனைத்தொடர்ந்து திருவாடானை போலீஸார் வழக்கு பதிந்து  கண்மாயில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 டாரஸ் லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்து  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT