சிவகங்கை

சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது

DIN

காரைக்குடியில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 3 இளைஞர்களை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காரைக்குடியில் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்வது மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தொடர்பாக, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு, காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். 
அதன்பேரில், அண்மையில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு புகாருக்குள்ளான அழகப்பாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி (32), ரமேஷ் (33), பாலமுருகன் (33) ஆகிய 3 பேர்களையும் அழகப்பாபுரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT