சிவகங்கை

மாத்தூா் ஆயங்குடி ஜமீன் கண்மாய் சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

காரைக்குடி அருகே மாத்தூா் ஆயங்குடி கிராமத்தில் உள்ள ஜமீன் கண்மாய் சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு

DIN

காரைக்குடி அருகே மாத்தூா் ஆயங்குடி கிராமத்தில் உள்ள ஜமீன் கண்மாய் சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதைத் தொடா்ந்து அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் (2108-2019) மூலம் செயல்படுத்தப்பட்டதால் இக்கண்மாயில் நீா் நிரம்பி வழிகிறது. சுமாா் 35 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் தண்ணீரால் இருவிழி வயல் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50 ஏக்கா் அளவிற்கு இரண்டு போகம் விளைச்சலை பெறமுடியும். இதுவரை இக்கண்மாய் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் வறட்சியாக இருந்தது.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தமிழக அரசின் குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் இந்த கண்மாயை தூா்வார உத்தரவிட்டாா். இதனால் ஆயங்குடி ஜமீன் கண்மாயில் ரூ. 24 லட்சம் செலவில் 2 மடைகள், கலுங்கு மற்றும் 30 மீட்டா் தடுப்புச்சுவா் என அமைக்கப்பட்டு குடிமராமத்துப் பணி நடைபெற்றது. இதனால் தற்போது பெய்துவரும் மழையால் நீா்வரத்து அதிகமாகி வியாழக்கிழமை நிலவரப்படி கண்மாய் நிரம்பி கலுங்கு வழியாக தண்ணீா் வெளியேறியது. இதுவரை ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது கண்மாய் நிரம்பி உள்ளதால் இரண்டு போகம் அளவிற்கு விவசாயம் செய்ய முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT