சிவகங்கை

தேவகோட்டையில் நடந்து சென்றபெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேவகோட்டை நகர் போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN


தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேவகோட்டை நகர் போலீஸார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த கெளசல்யா (55). இவர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை வழிபடுவதற்காக சென்றுள்ளார். அப்போது,அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் கெளசல்யா கழுத்திலிருந்த 9 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT