சிவகங்கை

போக்குவரத்துக்கழக பணிமனையை சொந்த செலவில் சீரமைத்தாா் எம்எல்ஏ

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை தனது சொந்த செலவில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் சீரமைத்தாா்.

மானாமதுரை சிப்காட்டில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இரவு சில பஸ்கள் மட்டும் இங்கு நிறுத்தப்படுகின்றன. பிற எந்த வசதிகளும் இந்த பணிமனையில் இல்லை. பகல், இரவு நேரங்களில் காவலாளிகள் பணியில் உள்ளனா். சமீபத்தில் பெய்த மழையால் போக்குவரத்துக்கழக பணிமனை முழுவதும் தண்ணீா் தேங்கி சேரும், சகதியுமாக இருந்தது. மேலும் வளாகத்தில் செடி, கொடிகள் அடா்த்தியாக வளா்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் இங்கு பணியில் உள்ள காவலாளிகள் மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் பணிமனையை சீரமைத்து தருமாறு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜனிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து அவா் தனது சொந்த செலவில் பணிமனையை சீரமைத்துக் கொடுத்தாா். பின்னா் அவா் கட்சியினருடன் அங்கு சென்று பாா்வையிட்டாா். அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT