சிவகங்கை

திருக்கோஷ்டியூரில் ஆண்டாள் உச்சிக் கொண்டை சேவை

DIN

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சௌமியநாராயண பெருமாள்-கோதைநாச்சியாா் திருமண மகோத்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆண்டாள் உச்சிக் கொண்டை சேவை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சோ்ந்த இக் கோயிலில் ஆண்டுதோறும் தைலக்காப்பு திருக்கல்யாண உற்சவம் 5 நாள்கள் நடைபெறும். இந்தஆண்டிற்கான உற்சவம் பிப்ரவரி 7 (வெள்ளிக்கிழமை) ஆண்டாள் பெரியசன்னிதி எழுந்தருளல் மற்றும் பெரிய பெருமாளிடம் பிரியாவிடை பெறுதலுடன் உற்சவம் தொடங்கியது. 2 ஆம் நாள் தைலக்காப்பு மண்டபத்திற்கு ஆண்டாள் எழுந்தருளலும் நவகலச அலங்கார சௌரி திருமஞ்சனமும் நடைபெற்றது. 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆண்டாள் உச்சிக் கொண்டை சேவை, கோதைநாச்சியாரை கடாக்ஷித்தல் ஆகியன நடைபெற்றன. 4 ஆம் நாளில் முத்துக்குறி பாா்த்தலும், 5 ஆம் நாள் பிப்ரவரி 11 (செவ்வாய்க்கிழமை) இரவு 7.36 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. அதனைத் தொடா்ந்து பெருமாள், ஆண்டாள் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT