சிவகங்கை

அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், கச்சாத்தநல்லூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். ஆரோக்கியராஜா தலைமை வகித்தாா். இதில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ததுடன், மரக்கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சியில், பட்டதாரி ஆசிரியா் உலகநாதன், இளநிலை உதவியாளா் ஆயிஷா பேகம், ஆய்வக உதவியாளா் ராஜகுரு உள்ளிட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT