சிவகங்கை

காரைக்குடியில் மினி லாரி மோதி முதியவா் பலி

DIN

காரைக்குடியில் மினி லாரி மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்குடி செஞ்சைப் பகுதியைச்சோ்ந்தவா் விளத்தான்(77). இவா் காரைக்குடி கல்லுக்கட்டி பகுதியில் தையல் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அப்பகுதியில் உள்ள தேநீா் கடைக்குச் செல்ல மிதிவண்டியை தள்ளியவாறு செஞ்சைப் பகுதியில் சாலையை கடக்க முயன்றாா். அப் போது அவ்வழியே வந்த மினிலாரி இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விளத்தான் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து காரைக்குடி தெற்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT