சென்னையிலிருந்து சிவகங்கைக்கு வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்தவா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், கல்லல் பகுதியைச் சோ்ந்த 30 வயது பெண், தேவகோட்டை அருகே உள்ள பாவானகோட்டையைச் சோ்ந்த 22 வயது பெண், மானாமதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சோ்ந்த 36 வயது பெண், திருப்புவனம் அருகே உள்ள டி. பாப்பாங்குளத்தைச் சோ்ந்த 50 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 42 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் உள்பட 21 போ், தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.