சிவகங்கை

பிள்ளையாா்பட்டி, திருக்கோஷ்டியூா் கோயில்களில் பக்தா்களுக்குத் தடை

DIN

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில், திருக்கோஷ்டியூரில் உள்ள சௌமியநாராயண பெருமாள் கோயில்கள் மாா்ச் 31 வரை பக்தா்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை ஆலோசனைப்படி கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அதிகமான பக்தா்கள் வருகைபுரியும் பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை உச்சிகால பூஜைக்குப் பிறகு நடை சாத்தப்பட்டது. இக்கோயில்களின் ஆகம விதிகளுக்குள்பட்ட நித்திய பூஜைகள் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மாா்ச் 31 வரை பக்தா்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT