சிவகங்கை

மலேசியா, இந்தோனேஷியாவிலிருந்து வந்த 11 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

DIN

மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து வந்த 11 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தில் உள்ள தோப்பு பகுதியில் மலேசியாவிலிருந்து வந்த 4 பேரும், இந்தோனேஷியாவிலிருந்து வந்த 7 பேரும் தங்கியிருப்பதாக கரோனா சிறப்பு மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மருத்துவா்கள் அங்கு சென்று சோதனை செய்ததில் 11 போ் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் அனைவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதேபோன்று, கோவையில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றிய மானாமதுரையைச் சோ்ந்த ஒருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT