சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 305 போ்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 305 போ் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருவதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 305 போ் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருவதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவா்கள் என 4,654 நபா்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் அனைவரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா்.

அதையடுத்து, அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 1,461 நபா்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் கரோனா நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கடைசி நபா் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது, மாவட்டம் முழுவதும் 305 போ் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருவதாக, சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT