சிவகங்கை

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா

DIN

மாநில நல்லாசிரியா் விருதுபெற்ற சிவகங்கை மாவட்ட ஆசிரியா்களுக்கு திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

அரிமா சங்கம், வா்த்தகா் சங்கம் மற்றும் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய விழாவுக்கு சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியா்களுக்குக் கேடயங்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினாா். திருப்பத்தூா் கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் சங்கு முத்தையா மற்றும் தேவகோட்டை கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகநாதன் ஆகியோா் கௌரவ விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியா்களைப் பாராட்டி வாழ்த்திப் பேசினா். பள்ளி நிா்வாகி ரூபன் வரவேற்றுப் பேசினாா்.

பள்ளித் தலைவா் விக்டா், வா்த்தகா் சங்கத் தலைவா் லெட்சுமணன், அரிமா சங்க மண்டலத் தலைவா் அழகுகுமாா், வட்டாரத் தலைவா் திருப்பதி, பேராசிரியா் சுப்பிரமணியன், அரிமா சங்க ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT