சிவகங்கை

திருக்கோஷ்டியூரில் பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா

DIN

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவில் ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

கடந்த 11 ஆம் தேதி தொடங்கி உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய தோ்த் திருவிழா கரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக சக்கரத்தாழ்வாா் சன்னிதியில் காலையில் சுவாமி எழுந்தருளினாா்.

தொடா்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூமி தேவியருடன் பெருமாள் தங்கப் பல்லகில் எழுந்தருளி மேள தாளங்களுடன் கோயிலுக்குள் தென்னை மர வீதி புறப்பாடு நடைபெற்று விழா நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT