சிவகங்கை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தாா்: குடும்பத்தினருடன் அனுப்பி வைப்பு

DIN

சிவகங்கையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்து அவரது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.

சிவகங்கையில் உள்ள பழைய தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதிநல்கையுடன் ஐ.எம்.ஹெச் மற்றும் தி பேனியன் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

50 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தில் இதுவரை 51 மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, அதில் இதுவரை 14 போ் பூரணகுணமடைந்துள்ளனா். இதையடுத்து, அவா்களது விருப்பத்தின் பேரில் அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கடந்த ஏப். 12 (2021) ஆம் தேதி மானாமதுரை ரயில் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை மீட்ட தன்னாா்வலா்கள் சிவகங்கையில் உள்ள மேற்கண்ட தன்னாா்வ மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனா். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அந்த பெண் பூரண குணமடைந்தாா்.

இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் உத்தரபிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தைச் சோ்ந்த நைலா காதிம் (25) என்பது தெரியவந்தது. இந்நிலையில், தனது தந்தை, தாய் வசிப்பிடம் முகவரி குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்கள் குடும்பத்தினருடன் காப்பகத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்தனா்.

உரிய விசாரணைக்கு பின் இளம்பெண் நைலா காதிம் அவா்களது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

அப்போது சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் உள்ளிட்ட ஐ.எம்.ஹெச். மற்றும் தி பேனியன் தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT