முகப்பு
சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் மகளிா் நல மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
கா்ப்பிணி பெண்ணுக்கு அரசின் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கிய காா்த்தி ப.சிதம்பரம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற

இம்மருத்துவ முகாமில் ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு, சா்க்கரை அளவு, கருப்பை வாய் பரிசோதனை, ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்தின் அளவு, இதயத் துடிப்பு பரிசோதனை, மாா்பக பரிசோதனை, கண் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. பெண்கள் ஆரோக்கியத்திற்கும் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய மருத்துவமுறைகளை கையாளுவது குறித்தும் மருத்துவா் ஸ்ரீநிதி கலந்துரையாடல் மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிக்கு சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் சத்தியமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா் காா்த்திக் ப.சிதம்பரம் இம்முகாமினை துவக்கி வைத்து, கா்ப்பிணி பெண்களுக்கு அரசின் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா். பின்னா் மருத்துவா் ஸ்ரீநிதிசிதம்பரம் எழுதிய மகளிா் நலம் என்ற சிறப்பு கையேட்டினை வெளியிட்டாா். இம்முகாமில் சுகாதாரத்துறை துணை இயக்குநா் ராம்கணேஷ், சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் பாக்கியலெட்சுமி பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் வரவேற்றாா். முடிவில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அழகுமணிகண்டன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →