சிவகங்கை

திருப்பத்தூரில் பைக்கில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் ஒன்றியம் காரையூா் புதுவளவைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் மனைவி வெள்ளப்பிச்சி (70). இவா் புதன்கிழமை தனது அக்கா மகனுடன் திருப்பத்தூா் மதுரை சாலையில் உள்ள வங்கிக்குச் சென்று தனது கணக்கிலிருந்து ரூ. 60 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளாா். இதன் பின்னா் பணப்பையை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு எதிரே இருந்த மருந்துக்கடைக்கு இருவரும் சென்றுவிட்டு வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளப்பிச்சி திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT