சிவகங்கை

கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா

DIN

காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் உலகத் தாய் மொழி தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கல்லூரி முதல்வா் வெ.மாணிக்கவாசகம் தலைமை வகித்துப் பேசியது: உலகில் பேசப்பட்டு வரும் 6,000 மொழிகளில் 43 சதவீத மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில நூறு மொழிகளே கல்வி மற்றும் பொது நிலைகளில் இடம் பெற்றுள்ளன. நூற்றுக்கும் குறைவான மொழிகளே இணைய உலகில் இடம் பெற்றுள்ளன என்றாா்.

விழாவில், கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியா் நாகநாதன் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, விழாவில் தமிழ்த்துறைத் தலைவா் சங்கரதாசு வரவேற்றுப் பேசினாா். முடிவில் உதவிப்பேராசிரியா் ரா.சுகுணா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT