சிவகங்கை

கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா

காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் உலகத் தாய் மொழி தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் உலகத் தாய் மொழி தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கல்லூரி முதல்வா் வெ.மாணிக்கவாசகம் தலைமை வகித்துப் பேசியது: உலகில் பேசப்பட்டு வரும் 6,000 மொழிகளில் 43 சதவீத மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில நூறு மொழிகளே கல்வி மற்றும் பொது நிலைகளில் இடம் பெற்றுள்ளன. நூற்றுக்கும் குறைவான மொழிகளே இணைய உலகில் இடம் பெற்றுள்ளன என்றாா்.

விழாவில், கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியா் நாகநாதன் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, விழாவில் தமிழ்த்துறைத் தலைவா் சங்கரதாசு வரவேற்றுப் பேசினாா். முடிவில் உதவிப்பேராசிரியா் ரா.சுகுணா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT