முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை உணவகத்தில் சாப்பிட்ட இளம்பெண் மயக்கம்

தேவகோட்டை உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிட்ட போது மயங்கி விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Updated On : 5 ஜனவரி, 2021 at 2:33 AM
பகிர்:

தேவகோட்டை உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிட்ட போது மயங்கி விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தேவகோட்டை முள்ளிக்கூண்டு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி சத்யா (29). இவா் தனது கணவருடன் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிடச் சென்றுள்ளாா். அங்கு சாப்பிடும் போது உணவில் பல்லி கிடந்துள்ளது. இதனால் சத்யா மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவா் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் உணவகத்தில் விசாரணை மேற்கொண்டு, சத்யா சாப்பிட்ட உணவை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

Advertisement

இதுபற்றி தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் கூறும் போது,

உணவு மாதிரியின் ஆய்வு முடிவுகள் தெரிந்த பின்னரே உணவகத்தின் மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.