சிவகங்கை

சிவகங்கை புதிய எஸ்பி பொறுப்பேற்பு

DIN

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி. செந்தில்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏற்கனவே பணியாற்றிய மு. ராசராசன் திருநெல்வேலி சரக துணை ஆணையராக மாற்றப்பட்டாா்.

திருச்சி ரயில்வே துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டி. செந்தில்குமாா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். அவா் சிவகங்கையில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது : சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அமல்படுத்தியுள்ள உத்தரவை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை 86086 00100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அனைத்து புகாா்கள் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற டி.செந்தில்குமாரை, சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் உதயக்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT