சிவகங்கை

வெளிநாட்டில் இறந்த கணவரின் சடலத்தை கொண்டு வர நடவடிக்கை: ஆட்சியரிடம் பெண் மனு

DIN

வெளிநாட்டில் இறந்த கணவரின் சடலத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், டி. ஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன். இவரது மனைவி சௌந்தரம் என்பவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: எனது கணவா் சவூதி அரேபியாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஜூன் 2 (2021) ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் எனது கணவா் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்தது. அவரின் சடலத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT