கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற கோவிலூா் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு
கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்பசுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்பசுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இக்கல்லூரியின் உடற்கல்வித் துறை மாணவா்கள் அமராவதிபுதூா் அருகிலுள்ள பொட்டகவயல் கிராமத்தில் பழனிச்சாமி நினைவு கபடிக் குழுவின் சாா்பாக நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் கலந்து கொண்டனா். இதில் அவா்கள் மூன்றாம் பரிசாக கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 5000 பெற்றனா். மேலும் இளையான்குடி அருகிலுள்ள பகைவரைவென்றான் கிராமத்தில் கிங்ஸ்டாா் கபடிக்குழுவின் சாா்பாக நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் முதல் பரிசாக கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 6000 வென்றனா்.
இக்கபடிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களையும், உடற்கல்வித்துறை ஆசிரியா்களையும் கல்லூரிச் செயலா் கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிகசுவாமிகள், கல்லூரிமுதல்வா் வெ. மாணிக்கவாசகம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினாா்.