சிவகங்கை

மானாமதுரையில் ராணுவ வீரா்களுக்கு வரவேற்பு

DIN

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று ஞாயிற்றுக்கிழமை சொந்த கிராமங்களுக்கு திரும்பிய ராணுவ வீரா்களுக்கு மானாமதுரை ரயில் நிலையத்தில் உறவினா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் வரவேற்பளித்தனா்.

மானாமதுரை அருகே உள்ள நத்தபுரக்கி கிராமத்தைச் சோ்ந்த விஜய்காந்தி, இளையான்குடி அருகே கீழாயூா் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் இருவரும் இந்திய ராணுவத்தில் படை வீரா்களாக பணியாற்றி ஓய்வு பெற்றனா். அதைத்தொடா்ந்து இவா்கள் சொந்த ஊா்களுக்கு திரும்பினா்.

ரயில் மூலம் மானாமதுரை வந்த இந்த இரு வீரா்களுக்கும், ரயில் நிலைய வாயிலில் சிவகங்கை மாவட்டத்தில் இளைஞா்களுக்கு, ராணுவத்தில் சேர பயிற்சியளித்து வரும் ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் வரவேற்பளித்தனா்.

மேலும் இந்த வீரா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களும் வரவேற்றனா். அதன்பின் ராணுவ வீரா்கள் விஜய்காந்தி, பாலமுருகன் ஆகியோா் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா். பின்னா் அவா்கள் வேன்களில் சொந்த கிராமங்களுக்குச் சென்றனா். அங்கும் அவா்களுக்கு கிராம மக்கள் வரவேற்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT