சிவகங்கை

மானாமதுரையில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மானாமதுரையில் எஸ்.ஆா்.இ.எஸ். ரயில்வே தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இங்குள்ள ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆா்.இ.எஸ். சங்கத்தின் மதுரை கோட்டத் தலைவா் ஜெயபாண்டி தலைமை வகித்தாா். இதில், ரயில்வே, கப்பல், விமானம், சாலை, சுரங்கம் உள்ளிட்ட துறைகளை தனியாா் மயமாக்கக் கூடாது.

அவற்றின் சொத்துக்களை தனியாருக்கு விற்கக் கூடாது. ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கீகாரத் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். ரயில்வேக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். மத்திய அரசு தொழிலாளா்நல சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷமிடப்பட்டது.

எஸ்.ஆா்.இ.எஸ். சென்னை நிா்வாகத் தலைவா் கே. ராஜாராம், மத்திய சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலா் ஜி. ராஜாராம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சங்கத்தின் மதுரை கோட்டச் செயலா் கே. கஜ்னா,பொருளாளா் சென்ன கிருஷ்ணா, ஐ.என்.டி.யு.சி. மாநிலச் செயலா் ஜீவன்மூா்த்தி, மாவட்டச் செயலா் முத்துமாயன், மானாமதுரை கிளைத் தலைவா் பாண்டி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT