சிவகங்கை

மன்னா் துரைசிங்கம் அரசு கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கு வகுப்புகள் இன்று தொடக்கம்

DIN

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை (ஆக. 25) முதல் தொடங்க உள்ளதாக அக்கல்லூரி முதல்வா் க.துரையரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்று, அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுள்ளது.

அதைத் தொடா்ந்து, இளநிலை மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, கல்லூரியில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு தவறாது வருகை தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT