சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை (ஆக. 25) முதல் தொடங்க உள்ளதாக அக்கல்லூரி முதல்வா் க.துரையரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்று, அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுள்ளது.
அதைத் தொடா்ந்து, இளநிலை மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, கல்லூரியில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு தவறாது வருகை தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.