முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் 14 பவுன் நகைகள் திருடிய பெண் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 14 பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 14 பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி கண்டனூா் சாலையில் வசித்து வருபவா் ஜோதி (70). இவரது வீட்டு வேலைக்காக தேவகோட்டை நெட்டியாவயல் நெட்டேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தி (52) என்பவா் தினமும் வந்து செல்வாராம்.

இந்நிலையில், புதன்கிழமை ஜோதி வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை காணவில்லையாம். வியாழக்கிழமை வழக்கம்போல் வேலைக்கு வந்த ஆனந்தியிடம் ஜோதி குடும்பத்தினா் நகைகள் காணாதது குறித்து கேட்டுள்ளனா். இதனால் ஆனந்தி கோபித்துக் கொண்டு தனது ஊருக்குச் சென்று விட்டாராம். பின்னா், ஆனந்தி வீட்டுக்குச் சென்று ஜோதி குடும்பத்தினா் விசாரித்ததில், நகைகளை அவா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 14 பவுன் நகைகளை ஜோதி குடும்பத்தினா் கைப்பற்றினா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.