சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே திங்கள்கிழமை விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
எஸ்.புதூா் ஒன்றியம் கே.இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பழனிசாமி (50). இவா் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தனது வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள தனது தோட்டத்திற்கு குடும்பத்துடன் விவசாயப் பணிகளை மேற்கொள்ளச் சென்றுள்ளாா்.
இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு பழனிசாமி வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, இரண்டு அறைகளில் இருந்த 3 பீரோக்களை மா்ம நபா்கள் உடைத்து அதிலிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புழுதிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.