சிவகங்கை

தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தை உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

DIN

திருப்பத்தூா் அருகே, எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தை உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

மாநிலத்தில், ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே, எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை, உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா, மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். மேலும், உணவின் தரம் குறித்தும் மாணவா்களிடம் கேட்டறிந்தனா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், தேவகோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT