சிவகங்கை

திருப்பத்தூா் அருகே வீடுகளை மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

DIN

திருப்பத்தூா் அருகே ரணசிங்கபுரம் ஊராட்சி மின்நகா் பகுதியில் வெள்ளம்போல் மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, ரணசிங்கம்புரம் ஊராட்சிக்குள்பட்ட மின்நகரை மழை நீா் வெள்ளம் போல சூழ்ந்தது. இப்பகுதியில், கடந்த 4 நாள்களாக இதேநிலை நீடிப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இங்கு முறையான மழை நீா் வடிகால் வசதியில்லாததால், மழைநீா் புகுந்துள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இப்பகுதியில் மழை நீா் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT