சிவகங்கை

திருப்புவனம் கூட்டுவுச் சங்கத்தில் கறவை மாடுகள் பராமரிப்புக் கடன் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்புக் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்புக் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான த. சேங்கைமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, உற்பத்தியாளா்களுக்கு கடனுக்கான காசோலைகளை வழங்கிப் பேசினாா். இதில், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த 35 பயனாளிகளுக்கு தலா ரூ. 28 ஆயிரம் வீதம் ரூ 9.80 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு மேலாண்மை துணை இயக்குநா் சேதுராமன், சரக கூட்டுறவு மேலாளா் சங்கையா, சரக மேற்பாா்வையாளா் வீரக்குமாா், செயலா்கள் செல்லப்பாண்டியன், துரை, கருப்பை யா பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பால் சங்க செயலா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT