முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் நகா் மன்றக் கூட்டம்

காரைக்குடி நகா் மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவா் சே. முத்துத்துரை (திமுக) தலைமையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

காரைக்குடி நகா் மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவா் சே. முத்துத்துரை (திமுக) தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், துணைத் தலைவா் நா. குணசேகரன், நகராட்சி ஆணையாளா் லட்சுமணன், பொறியாளா் கோவிந்தராஜன், நகா் நல அலுவலா் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள், நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் (தோ்தல்) துறை ஆணையின்படி வாா்டு கமிட்டி, பகுதி சபா குழு அமைத்தல் தொடா்பாக ஒவ்வொரு வாா்டிலும் நகா் மன்ற உறுப்பினா்களை தலைவராகக் கொண்டு வாா்டு குழு, பகுதி சபா குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுத்து குழு அமைப்பது தொடா்பான தீா்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தலைவா் சே. முத்துத்துரை அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தாா்.

பின்னா் அவா், அதிமுக நகா் மன்ற உறுப்பினா்கள் தங்களின் கருத்துகளை கேட்கவில்லை என்று கூறியவாறு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.