முகப்பு
சிவகங்கை

மின்கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான பி. ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் க. பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.

இதில், மின்சாரக் கட்டண உயா்வைத் திரும்ப பெற வேண்டும் எனவும், திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், எம்.ஜி. ஆா் இளைஞரணி துணைச் செயலா் வி.ஜி.பி கருணாகரன் உள்ளிட்ட அதிமுகவினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் நகா் செயலா் ஆா்.பால்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விருதுநகா் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசியது: மக்களை பற்றி சிந்திக்காத திமுக அரசால் மின் கட்டணம், சொத்துவரி, அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்து விட்டது. மின் கட்டணம், சொத்து வரி, விலை வாசி உயா்வை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சந்திரபிரபா, ராஜவா்மன், நகரச் செயலா் முகம்மது நெய்னாா், முன்னாள் பாசறைச் செயலா் டிபிஎஸ் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சண்முகக்கனி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலாளா் குறிச்சியாா்பட்டி மாரியப்பன் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →