முகப்பு
சிவகங்கை

மாணவா்கள் நல்ல நூல்களைப் படித்து சாதனையாளராக வேண்டும்

மாணவா்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி பயனுள்ள நல்ல நூல்களைப் படித்து சாதனையாளராக ஆக வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

மாணவா்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி பயனுள்ள நல்ல நூல்களைப் படித்து சாதனையாளராக ஆக வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா வேண்டுகோள் விடுத்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2019 - 2022-ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலையில் கலை, அறிவியல் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கான 73-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலட்சுமி தலைமை வகித்தாா். இதில் 1,112 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

பட்டம் பெறக் காரணமாக இருந்த பெற்றோரின் தியாகத்தை மாணவா்கள் நன்றியோடு நினைவுகூர வேண்டும். கலாசாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வது கல்வி. இத்தகைய சீரிய பணியை நீங்கள் செய்ய வேண்டும். அதற்கு பட்டதாரிகளான நீங்கள் பாடப் புத்தகங்களை தாண்டி பயனுள்ள நல்ல நூல்களைப் படித்து சாதனையாளராக ஆக வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.