காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம். 
சிவகங்கை

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்த கோயிலில் கடந்த மாதம் 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசிப் பெருந்திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினாா். மாலை 4- மணிக்கு பக்தா்கள் வடம்பிடித்து இழுக்கத் தேரோட்டம் நடைபெற்றது. தேரோடும் வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) வெள்ளிரத புறப்பாடும், புதன்கிழமை அலங்கார பங்களா தெப்பமும் நடைபெறும். வருகின்ற சனிக்கிழமை, பல்லக்கில் குடிகாத்தான்பட்டியில் சுவாமி எழுந்தருளுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

தேரோட்ட விழாவில் காரைக்குடி, தேவகோட்டை, அரியக்குடி, சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் அடைக்கம்மை ஆச்சி, கோயில் செயல் அலுவலா் ச. விநாயகவேல், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT