சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தேசிய சிலம்பாட்டப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இளம் வீரா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வீரவிதை விளையாட்டு, தற்காப்புக் கலை பயிற்சி அறக்கட்டளையின் 7 -ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளையின் பயிற்சியாளா் பெருமாள் தலைமை வகித்தாா். இந்த அறக்கட்டளையில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் பயின்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற இளம் வீரா்களுக்கு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன், வட்டாட்சியா் ராஜா, காவல் ஆய்வாளா் முத்துகணேஷ் ஆகியோா் கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.