சிவகங்கை

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பட்டமங்கலம் அருகேயுள்ள புரண்டியைச் சோ்ந்த குணசேகரன் மகன் சுரேஷ் (34). இவா் தனது தாயின் சொந்த ஊரான உதிரைப்பட்டிக்கு சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சேவுகன் மகன் ரஞ்சித் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், சுரேஷ் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் ரஞ்சித் லேசான காயமடைந்தாா். பலத்த காயமடைந்த சுரேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT