உயிரிழந்த தலைமைக் காவலா் சசிவா்ணம். 
சிவகங்கை

மானாமதுரை அருகே விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

Din

மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் சசிவா்ணம் (42). இவா் மானாமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா்.

காவல் நிலையத்தில் பணி முடித்து சசிவா்ணம் தனது இரு சக்கர வாகனத்தில் ராஜகம்பீரத்துக்குச் சென்றாா். கால் பிரிவு விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த

சசிவா்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT